Saturday, 31 January 2015

தாழ்ந்த உலகு

விளையாடும்
பருவம்தான்
அவனுக்கும்!
உடல்வளைத்து
தடதடக்கும் இரயிலில்
விளையாடிக்
கொண்டிருக்கின்றான்
தன் அக்காளின்
இசைமழையில்...
எல்லோரும்
பார்க்கின்றார் - சிலர்
அன்பு செய்தார் - அவன்
வாழ்விற்கில்லை
சிறு வயிற்றுக்கு
அந்த சிலராய்
நானிருந்தும்
என்ன பயன்
நாட்டிற்கு?
படிப்பறியா
அவன் வம்சம்
படிப்பதற்கு
வழியிலையோ!
ஆளவந்தார்
ஆண்டுசென்றார்
இந்நிலைக்கென்ன
செய்தீரோ?
தன்பிள்ளையை
உடல் அனைத்து
இப்பிள்ளையை
பார்கின்றாள் - ஓர்தாய்
வெடுக்கென
பார்வையை
விலக்கியவள்
உள்ளத்தை
இக்கணம்வரை
விளங்கமுடியவில்லை!

No comments:

Post a Comment