Sunday, 4 September 2016



கூர்விழியாள்
இதழோரம்
பூத்தச் சிரிப்பில்...
சிதைந்தோடுது
அவள்மீது நான் 
கொண்ட காமம்...
காமம் சிதைந்ததனால்
காதல் விரைகிறதா?
காதல் வளர்ந்ததனால்
காமம் குறைகிறதா?
விடை தேடுவதா
இங்கு முக்கியம்?
வயது காத்திருக்காது
என்பதே சத்தியம்...
அவள் மட்டும் அவளாக இருக்கக்கூடாது ...


புறக்கணித்தாள்
குப்பைக்கீரையென
என்னை அவள்!
அரசமரம் கூட 
அந்தச் விதையிருந்து
எழுவதறியாமல்!!

She is one among the myriads of shining stars who ensnare my evil mind by cryptic utterances like those philosopher's with cudgelled brain.
அந்த அந்தியில்
ஆயிரம் இன்பங்களாய்
அவள் என்னருகில்தான்
அமர்ந்திருந்தாள்.
தீந்தமிழால் தேனொழுக
பேசிய பச்சைக்கிளி அவளிடம்
முன்னொருவன் சொன்னபடி
பேச முயன்று நின்றேன்!
என்ன பேச்சு வரவில்லையா
என நமட்டுச்சிரிப்புச் சிரித்தவள்
எல்லாவற்றையும் கேட்டவளாகவே
அமர்ந்திருந்தாள் - நான் நெருப்பானேன்
உராய்ந்தால் பற்றுவது இயல்புதானே!
பஞ்சும் நெருப்புமென்றால் - இரண்டுமே
பற்றிக்கொண்டிருக்கும்
ஆழ அவள் மனதில் மூச்சடக்கி
மூழ்கி வந்தேன்; முத்துடன் வரவில்லை
அதனால் நான் முத்தமும் தரவில்லை.
மாலை சாய்ந்ததால்
பாவையை பிரிந்துவந்தேன்!
என் நாசியில் அவள்
வாசம் மட்டுமே சுமந்துவந்தேன்!
ஞானப்பெண்ணவள் என்பதால்
ஞானியாக்கிவிடுவாளோ என்ற
அச்சமும் எனக்குண்டு, அஞ்சுவதற்கு
அஞ்சித்தானே ஆகவேண்டியிருக்கிறது.
விந்தணுக்களை
உமிழ்ந்த காலம்
இல்லாத காதல்,
கவிதை வாசிக்க
பீரிட்டெழுகிறது
பீரிட்டெழும் காதலை
பங்குபோட்டுக்கொள்ள
யாரெல்லாம் வருகிறீர்கள்?
அவள் உடலை - யார்
தீண்டினால் எனக்கென்ன?
அவள் உள்ளத்தை 
தீண்டியவன் நான் மட்டுமே!